திருப்பதி லட்டு கதை தெரியுமா?


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?

கி.பி.830ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும்.

தரித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீடுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனால், முதலில் திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னால், கி.பி.1445ஆம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல் படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.

ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. இது தவிர, கல்யாண உற்சவ லட்டு, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.



Leave a Comment