கல்விக்கு அதிபதியான பிராம்ஹி தேவியின் காயத்ரி மந்திரம்


மேற்கு திசைக்கு அதிபதியாக இருப்பவள் பிராம்ஹி. இவள், பராசக்தியின் முகத்தில் இருந்து உருவானவள். கலைவாணி என்று அழைக்கப்படும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்சமாக இவள் பார்க்கப்படுகிறாள். எனவே இவள் அன்னவாகனத்தில் வீற்றிருப்பாள். மான் தோலை தன் மீது அணிந்திருக்கும் இந்த அன்னை, ஞானத்தை வழங்கி அஞ்ஞானத்தை அகற்றுபவள்.

‘ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்’

என்ற பிராம்ஹி தேவியின் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு ஞாபக மறதி நீங்கும். கல்வி பயிலும் மாணவர்கள், முக்கியமான தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இந்தக் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை, மேற்கு நோக்கி அமர்ந்தபடி உச்சரித்து வந்தால் பலன் கிடைக்கும்.



Leave a Comment