திருமலையில் பக்தர்கள் புகார் அளிக்க டோல் ப்ரீ எண்


கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ் என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஊழியர்கள் உரையாற்றுவர்.

சிறிய பிரச்சனைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சனைக்களை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment