தோஷங்களை அகற்றும் வாயுபுத்திரன்


எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, அனுமனுக்கு என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
அனுமனுக்கு, வெண்ணெய் சாத்தி வழிபடுவதால், பக்தர்களின் கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகும் என்பது ஐதீகம்.

சனிக்கிழமைகளில் வெற்றிலையை மாலையாக கட்டி, ஆஞ்சநேயருக்கு அணிவிப்பதுடன், அனுமன் கவசம் படித்து வந்தால் எதிரிகள் பயம் நீங்கும்.

அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்தால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

அனுமனை சனிக்கிழமை தோறும் வணங்கி வருவதால், புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை தோறும் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாத்தி அனுமனை வழிபாடு செய்யலாம்.



Leave a Comment