கும்பகோணத்தில் மாசி மகத் தீர்த்தவாரி


கும்பகோணம் மகாமககுளத்தில் மாசிமகம் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. மாசி மகத்தை முன்னிட்டு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் தீர்த்தவாரி நடைபெறும். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மாசிமக திருவிழா மகாமக திருவிழாவில் தலைமை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மாசிமக தீர்த்தவாரி மார்ச் 1 ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் 7 சிவன் கோவில்கள், மற்றும் 5 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ சுவாமிகள் வீதியுலாவாக வந்து மகாமக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர். பின்னர் அஸ்திரதேவர் மூர்த்திகளுக்கு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அனைத்து கோவில்களின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் வந்திருந்து மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்.



Leave a Comment