மகாசிவராத்திரி - கோயில்களில் சிறப்பு வழிபாடு!


மகாசிவராத்திரி முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாள் `மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி என வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும், விரதங்களில் சிறப்பானது மகா சிவராத்திரி விரதம்தான் சிறப்பானது என்று கூறப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். அந்தவகையில் இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதுகிறது. இரவு நேரங்களில் விழித்திருந்து சிவனை தரிசனம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு தரிசனங்கள், ஆராதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Leave a Comment