ஏழேழு ஜென்ம பாவங்கள் நீக்கும் ரத சப்தமி!


சூரிய வழிபாடு நம் இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே உள்ளது. சூரியனின் ஒளிக்கதிரே இந்த வையத்தை உயிர்ப்புடன் வைக்கிறது. உயிர்கள் வளரவும், பல்கிப்பெருகவும் உதவும் சூரிய பகவானை வணங்க ஏற்படுத்தப்பட்ட புண்ணிய நாளே ரதசப்தமி. இது சூரிய பகவானுக்கு உரிய மாதமாக போற்றப்படும் தை மாத,அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. ரதசப்தமி அன்று தான், கருடாழ்வாரின் அண்ணனான அருணன் சாரதியாக இருக்க,ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன நம் புராணங்கள். சூரிய ஜெயந்தியான இன்று விஷ்ணுவும் சூர்ய நாராயணனாக வணங்கப்படுகிறார். தை அமாவாசையில் இருந்து வரும் ஏழாம் நாள் சப்தமி எனப்படுகிறது. சூரியன் தன் தேர்க்காலை வடக்கு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதை தான் ரதசப்தமி என்று குறிப்பிடப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குவதையே இது குறிக்கிறது. சூரியனின் தேரில் உள்ள 12 சக்கரங்கள் 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிப்பதாகும். வசந்தத்தையும் கோடையையும் வரவேற்கும் விதமாகவும் ரதசப்தமியை கொண்டாடுகிறோம்.



Leave a Comment