திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்ய....


திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் என தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் பல்வேறு ஊர்களில் உள்ளன. அதில், நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்கள் நேரடியாக வந்து முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதில், சில குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தை பயன்படுத்தப்பட உள்ள பொதுமக்கள் இனிமேல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழாவில் இருந்து அமலுக்கு வருகிறது. முதல் முறையாக, சித்தூர் மாவட்டத்தில் உள்ள 39 கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும். பொதுமக்கள் கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்ய, அந்தந்த மண்டப மேலாளர்களிடம் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.



Leave a Comment