மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஜன-1 ஆருத்ரா தரிசனம்


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று நள்ளிரவில் ஆருத்ரா தரிசன பூஜை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் நாள் நள்ளிரவு முதல் 2 ஆம் தேதி அதிகாலை வரை மார்கழி மாத திருவாதிரை தின பூஜைகள் நடைபெறும் என்றும் அப்போது, ஆருத்ரா தரிசன பூஜையும் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆருத்ரா தரிசனத்தன்று அருள்மிகு நடராஜர், சிவகாமி அம்மன் மற்றும் இதர 4 சபை உற்சவர் திருமேனிகள் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும். இரு சன்னதி மண்டபங்களிலும் ஏக காலத்தில் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை கால பூஜைகள் நிறைவுற்று, காலை 7 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளிலும் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.



Leave a Comment