முத்துப் பல்லக்கில் பத்மாவதி தாயார் பவனி!


திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று மழை வெளுத்துவாங்கிய நிலையிலும் பத்மாவதித் தாயார் முத்துப்பல்லக்கில் பவனி வர, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்ஸவ விழாவின் 3ம் நாளான இன்று, முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருடந்தோறும் வெகு விமரிசையாக இந்த பிரம்மோத்ஸவ விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதும் இருந்து, இந்த பிரம்மோத்ஸவ விழாவில் கலந்து கொண்டு, தாயாரைத் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்ஸவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 3ம் நாளான இன்று காலை கொட்டும் மழையில் முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாது பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளிகும் வைபவம் நடைபெறுகிறது.



Leave a Comment