ஸ்ரீ உன்பத்தாராகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம்...


கரூர் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்பத்தாராகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மனுக்கு மாசி மாத இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேக மேடைகள் அமைக்கப்பட்டு உற்சவர் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனை கொழுவிருக்க செய்தனர். தொடர்ந்து சிறப்பு திருமண கோலத்தில் காட்சி அளித்த வாராஹி அம்மனுக்கு சிவ பக்தர்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற பிறகு மேளதாளங்கள் முழங்க உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சுவாமிகளுக்கு கண்கானம் கட்டிய பிறகு சுவாமிக்கு பல்வேறு வேத மந்திரங்கள் ஓதியபடி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பால் பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து உதிரிப் பூக்களால் லட்சார்ச்சனை நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு ஆலாத்தி எடுத்தனர்.

கரூர் மினி பேருந்து நிலையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற உன்மத்த பைரவர், உன்மத்த வாராகி அம்மன் திருமண நிகழ்வை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிலர் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற ஜாதகத்தை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டது. உன்மத்த வாராஹி அம்மன் திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சியை ஆலய சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



Leave a Comment