ஸ்ரீ சீரடி சாயிபாபா பாதுகைகள் தரிசனம் ....


புதுச்சேரிக்கு வந்த சீரடி சாயிபாபாவின் பாதுகையை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஸ்ரீ சீரடி சாயிபாபாவின் 100ஆம் ஆண்டு மகா சமாதி விழா கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சீரடி சாய் சமஸ்தனத்தில் சார்பில் ஸ்ரீ சாயிபாபாவின் புனித பாதுகைகளை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடி ஸ்ரீ சீரடி சாயிபாபா கோயிலுக்கு சீரடி சாயிபாபா பாதுகைகள் கொண்டுவரப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.



Leave a Comment