தஞ்சாகூர் ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா...


சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூர் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய - அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக  பெருவிழா.

சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தஞ்சாகூர்   கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவகுமார மௌனகுரு சுவாமிகள் நல்லாசியுடன் ஆதி வில்வ வன ஷேத்திரம் என்னும் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய - அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக  பெருவிழா  காலை மங்கள இசை பாராயணம் வேத பாராயணம் நான் மறை போற்றும் நாயகன் பரஞ்ஜோதிஸ்வரருக்கு  நான்காம் கால வேள்விகள் தீபாராதனையுடன்.தொடங்கி பரிவார கலசங்கள் அனைத்து மூல மூர்த்திகளின் விமானங்கள் புறப்பாடாகி  அருள்மிகு பரஞ்ஜோதிஸ்வரர். ஞானாம்பிகை ராஜகோபுரத்திற்கு  மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை பரஞ்ஜோதிஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் கோ பூஜை மஹா தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது.

இக்கும்பாபிஷகம் விழாவை காண சிவகங்கை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில்  இருந்து சுமார்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

 



Leave a Comment