உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு...


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் என அழைக்கப்படும் திரு விக்ரம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று வைகுண்ட வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில்  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் எழுந்தருளி பக்த்தர்களுக்கு அருள் பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வைகுண்ட வாசலின் வழியே பெருமாள்  வருவதைக் கண்டு கோவிந்தா கோவிந்தா என ஆரவாரம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

 



Leave a Comment