திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி...


திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி  உற்சவர் சண்முக பெருமாளுக்கு  4-டன் மலர்களால் புஷ்பாஞ்சலி பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும்,  உற்சவர் சண்முகப் பெருமானுக்கு திருவிழாவில் கந்த சஷ்டி , இன்று 4-டன்மலர்களால் புஷ்பாஞ்சலி,1008 இலட்சார்ச்சனை நிகழ்ச்சி வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.

 இதனை தொடர்ந்து நாளை நவம்பர் 19-ஆம் தேதி காலை 10- மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற உள்ளது,

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள்- வி. சுரேஷ் பாபு, மோகனன், நாகன் ,ஆகியோர்கள் செய்துள்ளனர்.



Leave a Comment