ஏலேல சிங்க விநாயகருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்...


காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் புகழ்பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் பொது மக்கள் வழிபட்டு செல்வர். தொடர்ந்து இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.

 ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூ.50, ரூ.100, ரூ. 200, ரூ.500 என புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை வழியாக வரும் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான வழிபட்டுச் சென்று வருகின்றனர்.



Leave a Comment