கோயிலில் இந்த முறைப்படி பிராத்தனை செய்தால் நினைத்தது நடக்கும்.....


கோயிலில் சாமியிடம் வேண்டுவதாக இருந்தாலும், பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு முறை இருக்கிறது... அந்த முறைப்படி நாம் இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக அது நிறைவேற்றப்படும். அந்த முறைப்படி பரிகாரம் செய்தாலும் தெய்வம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

கோவிலுக்கு சென்றால் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டு என்ற நிறைய பேர் சொல்லி நாம் கேட்டிருப்போம் ஆனால், நம்மில் எத்தனை பேர், இந்த முறையில் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டி உள்ளனர் என்பது தெரியாது.

ஆனால் அடுத்தமுறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும் அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்துடைய கோவிலுக்கு சென்று வேண்டினாலும் தெய்வத்தின் முன் முட்டி போட்டு உங்கள் பிராத்தனைகளை வையுங்கள்.

நீங்கள் தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பு மண்டி போட்டு உங்கள் இரு கைகளையும் ஏந்தி உங்களுடைய பிரச்சனையை மற்றும் குறைகளை கடவுளிடம் சொல்லி வேண்டிய வரங்களை பெற்று கொள்ளுங்கள்.

இப்படி முட்டி போட்டு வேண்டினால் தெய்வம் நாம் கேட்டதை உடனே கொடுக்கும் என சொல்லபடுகிறது. இப்படி நீங்கள் எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்றாலும் முழங்கால் போட்டு மண்டி இட்டு, உங்களின் இரு கைகளையும் ஏந்தி வேண்டுதல் வைக்கும் போது உங்களுடைய வேண்டுதலை சீக்கிரம் ஏற்றுக் கொள்ளும்.

நீங்கள் நிறைய கோவில்களில் சிலர் தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து முழங்கால் மண்டியிட்டு கோவிலை சுற்றி வளம் வருவார்கள் அல்லது கோவில் படி ஏறி, தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படி எல்லாம் கூட தெய்வத்திற்கு பிராத்தனை செய்யாலாம் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகிறது..

தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பே மண்டியிட்டு தெய்வத்ததை முழு நம்பிக்கையோடு நினைத்து மனதார வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் நினைத்தது நிச்சயமாக ஒரு மண்டலத்தில் நடக்கும் அது நடக்கும்.



Leave a Comment