ஆடி கடைசி வெள்ளி ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு உச்சிக்கால பூஜை...


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவிலின் சிறப்பு தினமும் மதியம் ஒரு மணிக்கு உச்சிகால பூஜை மிக சிறப்பாகும்.

மேலும் ஆடி மாதம் தை மாதம் போன்ற மாதங்களில் வெள்ளிக்கிழமைகளில் இந்த உச்சிகால பூஜையை காண்பதற்காக பக்தர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மதுரை மானாமதுரை சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் தூத்துக்குடி மேலும் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருவார்கள்.

மேலும் ஆடி கடைசி வெள்ளி என்பதால் உச்சி கால பூஜையில் மட்டும் சுமார் 20,000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் இதற்காக சிவகங்கை மதுரை போன்ற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

 



Leave a Comment