பைரவர் கோயிலில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம்


விழுப்புரம் அருகே பைரவர் கோயிலில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில்  அமைந்துள்ள ஶ்ரீ சம்ஹார பைரவர் ஆலயத்தில்  ஒவ்வொரு  தமிழ் மாதம் முதல் வரும் செவ்வாய் அன்று இந்த ஆலயத்தில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் மற்றும் பூஜையுடன் சம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை சம்ஹார பைரவருக்கு  சந்தனம் பன்னீர் குங்குமம் பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  ரோஜா மல்லி என பல்வேறு வகை  மலர்களைக் கொண்டு சம்ஹார பைரவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சம்ஹார பைரவரை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment