குழந்தை வரம் வேண்டுமா திருக்கருகாவூருக்கு செல்க!


 

 

குழந்தை வரம் வேண்டுமா  திருக்கருகாவூரில் உள்ள கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அம்பாளை மனதார வழிப்பட்டால் ,நிச்சயம் உங்களுக்கு குழந்தை வரம்  கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 குழந்தை பாக்கியம் மட்டும் அல்ல, திருமண பாக்கியம் கூடி வராத பெண்களும்   இங்கு வந்து  கர்ப்பரட்சாம்பிகை  பிரார்த்தனை  செய்தால் திருமணம் கூடி வரும்.  அதே போல் ,முற்பிறவிகளின் கர்மாக்கள் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பின்,வியாழக்கிழமைகளில்  கர்ப்பரட்சாம்பிகை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால்,வம்ச தோஷம் நீங்கி,புத்திர பாக்கியம் கிடைக்கும். இது மட்டும் அல்ல அடியார்களை வாட்டும் நோய்நோடிகளில் இருந்து அவர்களைக் காத்தருள செய்கிறார்.

 வளர்பிறை பிரதோஷ   நாளில் கருகாவூரின் நாயகர் முல்லைவனநாதர்க்கு புனுகு சார்த்தி வணங்கினால்,தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்  என்பதும் இத்தலத்துக்கான மற்றொரு சிறப்பு அம்சமாகும். இத்தலம்   வரலாற்று  காலம் தொட்டே,கருவுற்ற  மகளிருக்கான ஆரோக்கியதலமாக இருந்து வந்துள்ளது. போர் நிகழும் காலங்களில் ,கருவுற்ற மகளிருக்கு அடைக்கலாம் தரும் இடமாக  இவ்வூர் திகழ்ந்தாக வரலாற்றுக்   கூறுகிறது.

 தங்க தொட்டில் தலலோ

 

தமிழக கோயில்களிலேயே   இங்கே மட்டும் தான் தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கோயில்கள் போல தங்கரதம் செய்ய வேண்டும் என்ற யோசனை  எழுந்த போது. எது மகப்பேறு அருளும் தலம் என்பதால் தங்கத் தொட்டில் செய்துவைத்தோம் என்கிறார்கள். அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள்,தங்க தொட்டிலில் தங்கள் சிசுவைப் படுக்கவைத்து,அம்பாள்  சந்நிதியை ஒருமுறை வலம் வருகின்றனர்.

தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டிலுக்குச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால்,அழகாக உருண்டு வரும்.குழந்தைக்காக வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையச் செய்யலாம்.அவர்கள், குழந்தைக்கு பதிலாகக் கோயிலில்  தரப்படும் ஸ்கந்தர் விக்கிரத்தை தொட்டிலில் இட்டு ,அம்பாள் சந்நிதியை வலம்வந்தால், குழந்தை பாக்கியம்   நிச்சயம் கிடைக்கும்.

 

அன்னையின் அருள் பெற்றதாக  நடிகை ஸ்ரீப்ரியா நம்முடன் சிலவற்றை பகிர்கிறார்.

என் வாழ்வில் திருக்கருகாவூருக்கு  ஓரு முக்கியமான இடம் உண்டு.என்னுடைய அம்மா ஊர் கும்பகோணம். அதனால் அதை சுத்தி இருக்கிற கோயில்கள் பத்தி எல்லாம் அவங்களுக்கு நல்லா தெரியும்.  என்னுடைய முதல் குழந்தை .ஆறு மாதங்களில்  சிதைஞ்சுப் போயிடுச்சு.அந்த சமயத்தில் நான்  ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன். அம்மா திருக்கருகாவூர் கோயிலுக்கு பொய் எங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணிட்டு பிரசாதமும் ,நெய்யும் கொண்டு வந்து  கொடுத்தாங்க.

நாங்க கோவிலுக்கு போகலன்னாலும். அந்த கர்ப்பரட்சகி மேல முழு நம்பிக்கையும் வெச்சு, மனதார  வேண்டிக்கிட்டு முறைப்படி அந்த நெய்யைச் சாப்பிட்டு வந்தோம்.அந்த வருடமே  மீண்டும் நான் கருத்தரிச்சேன். அதிலிருந்து யாராவது குழந்தை இல்லைன்னு வருத்தப்பட்டு   என்கிட்ட  சொன்னால் உடனே நான் அவங்களுக்குச் சொல்றது திருக்கருகாவூர் போய்ட்டு வாங்க என்பது தான்.   40 வயதுக்கு மேல ஆனவங்களுக்குக் கூட திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை  கோவிலுக்கு  சென்று வந்தால் குழந்தை பிறந்திருக்கு.

குழந்தை இல்லாதவர்கள்  நம்பிக்கையோடு ஒருமுறை திருக்கருகாவூர் சென்று அம்பாளை வழிப்பட்டு வாருங்கள். நிச்சயம் அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.

 



Leave a Comment