தீபாவளி திருநாளில் மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம்...


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் காலை, மாலை இருவேளைகளிலும் மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்தப்பட்டது. சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப் பட்டையும், சாத்துப்படியானது. தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடையும். வரும் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் முத்துகுமாரசுவாமி வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகும். சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் மற்றும் சண்முகார்ச்சனையும் நடைபெறும். வரும் 30ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை சந்திரசேகரர்சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாவார். நவம்பர் 3 ஆம் தேதி ஐப்பசி சுவாமிக்கு அன்னாபிஷேகம் உச்சிக்கால பூஜையின்போது நடைபெறும்.



Leave a Comment