தீபாவளியில் பட்டாசும்! பாதுகாப்பும்!


 

 

 

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் அர்த்தம் பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம். இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும். அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.

 

      

 

 

1.முதலில் அங்கீகரிக்கபட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கியபட்டாசுகள் நீங்கள் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டுவைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.

  2.ஒருபட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்யவேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன் படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்தவேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனை தெரிந்துகொள்ளாமல் பயன் படுத்தினால் கண் உட்பட எந்த உடல்உறுப்பும் பாதிக்கப்படலாம்.

3.தொழிற்சாலைகள், பெட்ரோல்பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளை தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்புபகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளைநோக்கி செலுத்துவதையும் தவிர்க்கவேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.

4.தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்குமட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒருபக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

5.ஒருநேரத்தில் ஒரே ஒருபட்டாசினை மட்டுமே கொளுத்தவேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.

6.நீங்கள் பற்றவைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்றவைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்தபட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.

7.குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.

8.நீங்கள் பற்றவைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்துநிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒருபக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்கவேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது. திரி எரிந்தும் வெடிக்காதவெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.

9.பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக்பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்திவைக்கலாம்.

10.நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒருபக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சிறிது நேரம்கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத்தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

11.பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.

12.ஒரு பட்டாசினை பற்ற வைக்கும் போது கை மற்றும் உடம்பின் எந்தபாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.

13.ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக்கண்ணாடி (Plain Spectacle) அணிந்துகொள்வது நல்லது.

14.மிகஅதிகமான ஒளியையும், மிகஅதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம்.

 

15.செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள்வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடைசெய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

16.எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

17.குழந்தைகளும் சிறுவர்களும் எந்தசிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதேசிறந்தது.

18.பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரேநேரத்தில் ஒரேஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.

19.ஒருபட்டாசு அல்லது மத்தாப்பினை கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்டகம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

20.மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசுகொளுத்தி விளையாட, அல்லது உதவிசெய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.

21.வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும் போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்கவேண்டும். அதனால் பெரியவிபத்துகளை தவிர்க்கலாம்.

22.தரைச்சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்கவேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின்தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.

23.நீளமான மத்தாப்புக்களை வைத்துக்கொண்டே வெடிகளை வெடிக்கவேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும் போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில்கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப் பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளேசென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

24.பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாக செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்துகொண்டே பட்டாசுகளை கொளுத்தி விளையாட வேண்டும்.

25.வெடிக்காத வெடிகளைத்தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..

 

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..

ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!

பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோம்!

 

 

 



Leave a Comment