தீபாவளிக்கு புதிய முறையில் வீட்டை அலங்கரிப்பது எப்படி?


தீபம் என்றால் ஒளி, விளக்கு என்றால் ஆவளி வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபாவளியின் போது நம் இல்லத்தை துய்மைபடுத்தி, இருளை போக்க  ஒளி ஏற்றுவதும் அலங்காரப்படுத்துவதும் வழக்கம். வழக்கம் போல் இல்லாமல் புதுமையாக அலங்கரிப்பது பற்றி காண்போம்.

 

 

மணி கோலம்

 

 

எந்த ஒரு பண்டிகை வந்தாலும் நமக்கு முதலில் நியாபகம் வருவது கோலம் தான். நாம் விட்டின் வாசலில் மற்றவரின் கண்களை கவரும் வகையில் நம் கோலம் அழகாக அமைய கோலத்திற்கு வண்ணங்கள் திட்டி அழுகுபடுத்துவோம். இப்பொது புதுமையாக வீட்டில் இருக்கும் மணிகளை  கொண்டே எளிய முறையில்  கோலங்களை அலங்கரிக்கலாம். இது வீட்டை அழகுபடுத்துவதோடு உங்களுக்கு பாராட்டையும் சேர்க்கும்.

தீபம்

 

 

 

தீபாவளி என்றாலே தீப திருநாள் தான். தீபம் இல்லாமல் தீபாவளி கிடையாது. தீபத்தை நாம் அன்றாட பயன்படுத்துகிறோம் ஆனால் அதில் புதுமை சேர்ப்பது உங்கள் வீட்டை இன்னும் மெருகேற்ற செய்யும். தீபம் பல வகைகளிலும் வடிவத்திலும் இருக்கும்.

வண்ண தீபம்

 

 

 

சாதாரண தீபத்திற்கு பல வண்ணங்களில் வரைந்து எளிய முறையில் தீபத்தை அழகுறச் செய்யலாம். அது தீபத்தின் அழகை கூட்டும். இதுவே உங்கள் கைத்திறனை காட்டும் நேரம்.

பழ தீபம்

ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து கூட தீபம் ஏற்றலாம், தெரியுமா?. ஆரஞ்சு பல தோலை படத்தில் காண்பது போல் நறுக்கி அதில் தீபத்தை வைக்கலாம். அது அழகு சேர்ப்பதோடு வீட்டில் நல்ல மனத்தை தரும்.

மணி தீபம்

வெறும் தீபமே பிராகாசத்துடன் அழகாய் காட்சியளிக்கும். அதில் வீட்டில்லுள்ள ஒளிரும் மணிகளை ஒட்டி அழுகுப்படுத்தினால் ஒளியுடன் சேர்ந்து இன்னும் அழகாய் மின்னும். குறைந்த தீபத்தில் அதிக வெளிச்சம் கிடைக்கும்.

தண்ணீரில் தீபம்

 

வாழ பட்டையில் தீபம் வைத்து அதை தண்ணீரில் மிதக்க விடும் காட்சி அழகாய் இருக்கும். ஆனால் நாம் இப்பொழுது இருக்கும் சமூக சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் வீட்டிலயே கண்ணாடி குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் தீபத்தை மிதக்க செய்யலாம். வீட்டின் மற்றொரு அலங்கரமாய் இது அமையும்.

பூ கோலமிட்டு அதில் தீபம்

ஓணம் பண்டிகையில் தான் பூக்கோலம் போடா வேண்டும் என்பது இல்லை. பூக்கோலம் எப்பொழுதுமே வீட்டிற்கு அழகு சேர்க்கும். பல வண்ண பூக்களை கொண்டு ரங்கோலி போடுங்கள். வீட்டுவாசலில் மட்டுமின்றி வரவேற்பு அறையிலும் இடலாம்.அதை இன்னும் அழகாக்க தீபங்களை கொண்டு பூ கோலத்தை அலங்கரியுங்கள்.

பேப்பர் தோரணம்

 

பண்டிகையின் போது அனைவரின் இல்லத்திலும் மா இலை கொண்டு, விட்டு வாசலின்  முற்றத்தை அலங்கரிப்பார்கள்.அதை நாம் பல வண்ணங்களில் உருவான பேப்பரைக் எந்த வடிவத்தில் வேண்டுமோ,அவற்றை  துண்டுகளாகப்பட்டு ,கம்மைக் கொண்டு அதை  எந்த வடிவத்திலும் செய்யலாம் . பேப்பரினால் செய்ததை  எந்த ஒரு இடத்தில் அலங்கரிக்க வேண்டும் என்று நினைக்கறோமோ அந்த இடத்த்தில் எளிய முறையில் மிக அழகாக அலங்கரித்துக் கொள்ளலாம். இதை கொண்டு நம் இல்லத்தை மேலும் அழகுற செய்யலாம்.

 

சின்ன பல்புகள்

பண்டிகை மற்றும் விழாக்களின் பொது ,அனைவரும் லைட் செட் பயன்படுத்துவார்கள். அதை சாதரணாமாக உபயோகிக்காமல் பேப்பர் கப்பில் ஓவியம் தீட்டி படத்தில் காண்பது போல் சிறு பல்புகளை மூடாலாம். இது அதிக வெளிச்சம் தராமல் மிதமாக அலங்கார தோரணம் போல் காட்சியளிக்கும்.

இது போன்று புதுமையான முறையில் அலங்காரம் செய்து   உங்கள் உறவினர்களின் முன் அசத்துங்கள்.



Leave a Comment