திருப்பதி கோவிலில் 9 ½ மணி நேர தரிசனம் ரத்து


 

திருமலை,ஜூலை-28 ,திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அடுத்த மதம்(ஆகஸ்டு)7-ந்தேதி இரவு 10.52 மணியில் இருந்து நள்ளிரவு 12.48 மணிவரை  சந்திர கிரகணம் ஏற்படுகிறது.அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கோவிலின் அனைத்துக் கதவுகளும் சாத்தப்பட்டு,மறுநாள்(8- ந்தேதி),அதிகாலை 2 மணிக்கு கோவிலின் கதவுகள் திறக்கப்படுகின்றன.ஏழுமலையான் கோவிலில் மொத்தம் 9 ½ மணி நேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

இதையடுத்து கோவிலை சுத்தம் செய்து மூலவர் வெங்கடாஜலபதிக்கு புண்ணியாவதனம்,நைவேத்தியம் செய்யப்படுகிறது.அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது.அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து இலவச தரிசனம்,திவ்ய தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம்,வி,ஐ,பி. தரிசனம்  ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே  7-ந்தேதி ஏழுமலையான்  கோவிலில் விசேஷ பூஜை, கல்யாண உற்சவம்,ஊஞ்சல் சேவை,ஆர்ஜித பிரம்மோற்சவம் வசந்த உற்சவம்,சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.மேலும் தோமால சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமகா(பக்தர்களுக்கு அனுமதியின்றி நடக்கிறது.



Leave a Comment