திருப்பதியில் தங்க தேரோட்டம்


திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கயி நிகழ்வான தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு தங்க குதிரை வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வந்தனர்.

நாளை காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

 



Leave a Comment