பூலோக கயிலாயமாக போற்றப்படும் திருஉத்தரகோசமங்கை


இராமநாதபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சிவஸ்தலம் திருஉத்தர கோசமங்கை. இந்து மத வேதங்களிலும் புராணங்களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது இந்த திருத்தலம். இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கயிலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இலங்கையில் இருந்து திரும்பி வந்த சிவன் அக்னியில் கலந்த அனைத்து சீடர்களையும் எழுப்பி அவர்களுக்கு சிறப்பு செய்ய அவர்களோடு ஐக்கியமாகி திருஉத்தரகோசமங்கையில் சகஸ்ர லிங்க மாக காட்சி தருகிறார் என்று இத்திருத்தல வரலாறு கூறுகிறது. இங்கு நடராஜருக்கு தனி சன்னதியுள்ளது. ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட ஓர் அபூர்வ பச்சை நிற மரகத நடராசர் சிலையுள்ளது. இச்சிலை ஓசைப்பட்டால் நாளடைவில் விரிசல் விடும் தன்மையுடையது.

அதனால் இச்சிலை ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே இருக்கும். மார்கழி மாதம் திருவாதிரைக்கு முதல் நாள் ஆருத்ர தரிசனத்தின் போது மட்டும் சந்தன காப்பு களையப்பட்டு மக்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். தினமும் மூலவருக்கு சிறப்பு வழிபாடு உண்டு. இக்கோயிலுக்க முன்புறம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் உள்ளது. இதுவே இக் கோயிலின் தலவிருட்சம் ஆகும்.

இதன் அருகில் ஓர் சிவலிங்கம் உள்ளது இது 20 வரிசையாகப் பகுக்கப்பட்டுள்ளது. வரிசைக்கு 50 லிங்கங்கள் வீதம் 20 வரிசைக்கு 1000 லிங்கம் உள்ளன. இது போன்ற அமைப்புள்ள சிவத்தலம் வேறெங்கும் இல்லை இத்திருத்தலத்திற்கு மேலும் சிறப்பு. இத்தலம் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற தலமாக போற்றப்பட்டு வருகிறது.



Leave a Comment