திருநள்ளாறு கோயிலில் பிரமோத்ஸவ கொடியேற்றம்


திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது.

ஸ்ரீ சனீஸ்வரபகவான் தலமாகத் திகழும் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவ கொடியேற்றம் முதல் தெப்ப உத்ஸவம் வரை விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டுக்கான உத்ஸவ தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை 8.15 -க்கு மேல் 9.45 மணிக்குள் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சிகளாக 18-ஆம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, 23-ஆம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மின் அலங்கார சப்பரப் படலில் வீதியுலா, 25-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் 26-ஆம் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா, 27-ஆம் தேதி தெப்போத்ஸவத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

திருவிழாவையொட்டி தேரோட்டத்தில் 5 தேர்கள் பவனிவரும். இவை அலங்காரம் செய்யும் பணிகளும், சப்பரப்படல் அலங்கரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.



Leave a Comment