ஏழுமலையான் கோயிலில் 2ஆம் நாள் தெப்போற்சவம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்பல் உற்சவத்தின் இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ மூர்த்திகளில் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தெப்ப உற்சவத்தின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.



Leave a Comment