திருச்செந்தூர் சுவாமி - அம்பாள் வீதி உலா


திருச்செந்தூர் மாசி திருவிழாவில் நேற்று சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இருந்து இரவு 6.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment