பழனி முருகன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்ப திருவிழா


 பழனி முருகன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்ப திருவிழா

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, பெரியநாயகி அம்மன் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் முத்துகுமாரசாமி, வள்ளி-தெய்வான அழைத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



Leave a Comment