10 ஆயிரம் பேர் தீ மிதித்த ஆடிக்குண்டம்....


வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் விழா துவங்கியதை அடுத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றப்பட்டு, நேற்று பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை, 3 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினார்.



Leave a Comment