திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா....


அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

இக்கோயிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்குகிறது. 27-ஆம் தேதி ஆடி பரணியும், 28-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.
அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோயிலில் இருந்து முருகப்பெருமான் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
இரவு 7 மணிக்கு முதல்நாள் தெப்பத் திருவிழா நடை பெறுகிறது. 29-ஆம் தேதியன்று இரண்டாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், 30-ஆம் தேதியன்று மூன்றாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



Leave a Comment