திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி...


மே 10-ஆம் தேதி சித்ரா பௌர்மணியை முன்னிட்டு திருவண்ணாமலை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத சிவஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளின்போது ஏராளமானோர் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர். சுமார் 14 கி.மீ. தூரம் கொண்ட மலையை சுற்ற முடியாத முதியவர்கள், உடல் நலிந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்காக ஆட்டோ, கார்கள் மூலமும் சுற்றும் வசதியும் உள்ளது. இந்நிலையில் வரும் மே 10-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவர். பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment