அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி....


திருவண்ணாமலை கோவிலில் சித்திரை வசந்த உற்வச விழாவையொட்டி அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை வசந்த விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேம், ஆராதனை நடந்து வந்தது. இரவில் கோவில் 3-ம் பிரகாரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் தலவிருட்சமான மகிழமரம் அருகே வரும்போது உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி முற்பகல் 11.30 மணியளவில் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு அய்யங்குளத்தில் எழுந்தருளினார்.



Leave a Comment