திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர பிரமோத்சவம் ....


திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர பிரமோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சானுர் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோத்சவம் நடத்துவது வழக்கம்.
கார்த்திகை மாதம் பஞ்சமி திதி உத்திராட நட்சத்திரத்தில் பத்ம சரோவர் திருக்குளத்தில் தாயார் அவதரித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, உத்திராட நட்சத்திர நாளில் பிரம்மோத்சவம் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த 10 நாட்களும் தினமும் காலை மாலை நேரங்களில் தயார், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவையொட்டி, திருப்பதி முதல் திருச்சானுர் வரை வழியெங்கும் அலங்கார மின்விளக்கு தோரணங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தாயார் ஆலயம் அருகில் உள்ள தோட்டத்தில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.



Leave a Comment