ஆந்திரவில் பின்தங்கிய வகுப்பினருக்கு திவ்ய தரிசன சுற்றுலா....


பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை வாரம் ஒருமுறை திவ்யதரிசன சுற்றுலா அழைத்துச் செல்ல ஆந்திர அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் வாழும் எஸ்சி, எஸ்டி, மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை ஸ்ரீசைலம், திருமலை, விஜயவாடா, மங்களகிரி உள்ளிட்ட கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்து செல்ல அம்மாநில அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த சுற்றுலாவுக்காக ஒரு மண்டலத்தில் 200 முதல் 250 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, தரிசனம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஆந்திர அறநிலையத்துறை ஏற்க உள்ளது. இதற்கு மக்களை எவ்வாறு தேர்வு செய்வது என அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இம்மாத இறுதிக்குள் இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Comment