பிரம்மோற்சவத்திற்கு கூடுதலாக 7 லட்சம் லட்டுகள்....


பிரம்மோற்சவ விழாவிற்காக திருப்பதில் கூடுதலாக 7 லட்சம் லட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இத குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், பிரம்மோற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தங்கு தடை யின்றி லட்டு பிரசாதங்கள் வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பில் இருத்தல் அவசியம் என சாம்பசிவ ராவ் கூறினார். மேலும், பிரம்மோற்சவத் திற்கு வரும் அனைத்து பக்தர் களும் திருப்திகரமாக சுவாமியை தரிசித்துச் செல்லும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யப்படும் என தெரிவித்தார்.
அதேபோன்று திருப்பதி, திருமலை யில் உள்ள தங்கும் அறைகளையும் மராமத்து செய்ய வேண்டும் கனவும் தரிசனம், இலவச அன்னபிர சாதம், தங்கும் அறை, பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவற்றில் எந்தவித குறைகளும் இன்றி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மாட வீதிகள், முக்கிய சத்திரங்கள், பேருந்து நிலையம், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பது மிக அவசியம் என வலியுறுத்திய அவர், கருட சேவையின் மாதிரி வீதி உலா வரும் 16-ம் தேதி நடைபெறும் என சாம்பசிவ ராவ் பேசினார்.



Leave a Comment