முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியவர் யார்?


முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியவர் யார்? என்ற கேள்விக்கு உங்களில் பலர் சரியான பதிலை கணித்திருப்பீர்கள். ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். ராம பக்த ஆஞ்சநேயர் தான் அந்த புண்ணியத்தை தொடங்கி வைத்த புண்ணியவான்.

ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து "அம்மா!" என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ""ஸ்ரீராமஜெயம்'' என்று எழுதிக் காண்பித்தார். அந்த குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள்.

இப்படித்தான் முதன்முதலில் "ஸ்ரீராமஜெயம்" மந்திரம் எழுதப்பட்டது. அன்று முதல் நாமஜெபம் என்ற பெயரில் ராமநாமத்தை பனை ஓலைகளில், காகிதத்தில் எழுதும் வழக்கம் உண்டானது. ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும் என்று சொல்வர்.



Leave a Comment