ஒரே நேரத்தில் காட்சியளித்த 6 தெய்வங்கள்...


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒரே நேரத்தில் 6 தெய்வங்கள் ஒரு சேர காட்சியளித்த நிகழ்வை திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இது போன்று ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே 6 தெய்வங்கள் ஒருசேர காட்சியளிப்பர். தெலுங்கு வருட பிறப்பு, கவுசிக ஏகாதசி, தீபாவளி பண்டிகை ஆகிய 3 நாட்களில் மட்டும், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோர் சேர்ந்து ஒரே இடத்தில் காட்சியளிப்பது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு, ஆண்டாள் கோயிலில் அனைத்து தெய்வங்களும் ஒரு சேர காட்சியளித்தனர். முன்னதாக ஆண்டாள் கோயிலுக்கு மேளதாளம் முழங்க பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் பெரிய பெருமாள் சன்னதியிலிருந்து அழைத்து வரப்பட்டனர். கோயிலில் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பின் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆண்டிற்கு 3 முறை மட்டுமே இந்த நிகழ்வு நடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கோயிலில் திரண்டு தரிசனம் செய்தனர்.



Leave a Comment