திருக்கோவிலூர் மகாமாரியம்மன் ஆலயத்தில் பெண்கள் 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்


திருக்கோவிலூர் மகாமாரியம்மன் ஆலயத்தில்  பெண்கள் 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஒ நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பெண்கள் 108 பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பால் அபிஷேகம், மகாதீபஆராதனை, பல்வேறு வாசனை திரவ அபிஷேகம் நடைபெற்றது,

இதை அடுத்து  மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது, மாலை அம்மன்  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து தங்களது சுமங்களியை பாதுகாக்கும் வகையிலும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதை வேண்டி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.



Leave a Comment