திருமலையை மேலும் அழகுபடுத்த திட்டம்...


திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் ரூ. 25 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பசுமை திட்டத்தின் அடிப்படையில் திருமலையை ரூ.25 கோடியில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், காவல் துறையினர், பக்தர்களின் துணையுடன் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்தப்பட்டது. ஆர்ஜித சேவை டிக்கெட்கள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை என்றும் அவர் கூறினார்.



Leave a Comment