திருப்பம் தரும் திருமலை


திருப்பதி திருமலை ஏழுமலையான், பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். ஏழுமலையான் குறித்த புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகின்றன. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம். புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது, இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. திருப்பதி திருமலை மகான்கள் நிறைந்த பூமி என்பதால்,அருளாசி நிறைந்து காணப்படுகிறது .திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல , திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சனை தீரும். துக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .



Leave a Comment