எத்திசையில் இருந்தும் காக்கும் அனுமன் கவசம்


ஹனுமான் பூர்வத: பாது தஷிணே பவனாத்மஜ: 
ப்ரதீச்யாம் பாதுரக்ஷோக்ன: சௌம்யாம் சாகரதாரண: 

அனுமன் என்னை கிழக்கு திக்கில் காக் கட்டும். தெற்கு திசையில் வாயு புத்ரன் ரட்சிக்கட்டும். மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும். சமுத்தி ரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்.

ஊர்த்வம் மே கேஸரிபாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத: 
லங்காவிதாஹக: பாதுஸர்வாபத்ப்யோ நிரந்தரம் 

கேசரியின் மைந்தன் என்னை ஆகாயத் தில் காக்கட்டும். விஷ்ணு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும். இலங் கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்கட்டும்.

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயு நந்தன
பாலம் பாது மஹாவீரா: ப்ருவோர் மத்யே நிரந்தரம் 

சுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும். வாயு புத்ரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும். மகா வீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்.

நேத்ரோ சாயாபஹாரிச பாதுமாம் ப்லவகேஸ்வர: 
கபோலௌ கர்ணமூலேது பாதுமே ராமகிங்கர: 

சாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களை காக்கட்டும். வானரங்களின் தலைவர் என்து கன்னங்களைக் காக்கட்டும். ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்.

நாஸாயாம் அஞ்சனாஸுனு: பாதுவக்தரம் ஹரீச்வர: 
பாது கண்டஞ்ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாதுஸுரார்சித: 

ஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட் டும். வானராதிபர் எனது முகத்தைக் காக்கட் டும். அசுரர்களின் பகைவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்.

புஜௌ பாது மஹா தேஜா: கரௌது சரணாயுத: 
நகான் நகாயுத: பாதுகுசெஷள பாது கபீஸ்வர: 

ஒளிபொருந்திய தேகத்தை உடையவர் எனது தோள்களைக் காக்கட்டும். கால்களை ஆதாரமாகக் கொண்டவர் எனது கால்களைக் காக்கட்டும். நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும். வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்.

வக்ஷௌமுத்ராபஹாரிச பாது பார்ச்வே மஹாபுஜ: 
ஸீதாசோகப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் 

ராமனின் கணையாழியை (மோதிரம்) எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்கட்டும். பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங் களையும் காக்கட்டும். சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் காக்கட்டும்.
 



Leave a Comment