மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்கள் சங்கடம் தீர்ந்து செல்வம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்.... 


வாழ்வில் மனிதனாக பிறந்து விட்டால் ஒவ்வொரு விஷயங்களிலும் தன் கர்ம வினைக்கு ஏற்ப வரக்கூடிய பலன்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது சாஸ்திரம். இருப்பினும் நம் கர்மவினை குறைந்து பிறவிப்பயன் அடைய, நம் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க, சங்கடங்கள் தீர, செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய எளிய அதி சக்தி வாய்ந்த மந்திரம் என்ன..?

முதல் மூன்று ராசியினர் அதாவது மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் முருகனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் பெறலாம்.

முருகன் மந்திரம்: 

பேர் ஆதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா!


சேரா நிருதர் குல கலகா! சேவற்கொடியாய்! திருச்செந்தூர்த் தேவா! தேவர் சிறைமீட்ட செல்வா! என்று உன் திருமுகத்தைப் 


பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர் பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா! வா, வா, என்று உன்னைப் போற்றப் பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால் 


வாராது இருக்க வழக்கு உண்டோ! வடிவேல் முருகா! வருகவே! வளரும் களபக் குரும்பை முலை வள்ளி கணவா! வருகவே!



Leave a Comment