திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதம் தரிசிக்க ஆன்லைன் டிக்கெட்


திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான ஜனவரி மாத டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.


ஜனவரி 1 2,  13ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆன்லைன் சேவைகளான கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை உள்ளிட்ட சேவைகளுக்கான 5500 டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும்.

 அதேபோல் ஜனவரி மாதம் 1ம் தேதி, 13-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி ஆகிய நாட்களில்  ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் என்று எண்ணிக்கையிலும், ஜனவரி 2-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மற்றும் 23ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆகிய நாட்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளொன்றிற்கு 12000 என்ற எண்ணிக்கையிலும் இன்று காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும்.

 திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 9 மணி முதல் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை திருப்பதி மலையில் உள்ள கவுண்டர்களில் மட்டுமே தங்கும் அறைகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Leave a Comment