பெண்களை எதிர்மறை ஆற்றல் எதுவும் நெருங்காமல் இருக்க இதை வைத்திருந்தால் போதும்


ஆன்மீக ரீதியாக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம், எந்த பொருளை தங்களுடைய கையில் வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். 

பெண்கள் என்றாலே அவர்கள் தினம்தோறும் அம்பாளை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.  உலகுக்கே தாயாக இருப்பவள் அந்த சக்தி தேவி! அந்த சக்தி தேவியின் ஸ்வரூபத்தில் தான் பெண்கள் இந்த பூலோகத்தில் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

முதலில் பெண்கள் நெற்றியில் நடு வகிட்டில் குங்குமம் வைத்து கொண்டாலே எந்தவொரு தீய சக்திகளும் அண்டவே அண்டாது. குங்குமம் என்றால அது அரக்கு குங்குமம்.

ஞாபகமிருக்கட்டும் எவ்வளவுக்கு எவ்வளவு குங்குமம் பெரியதாக நெற்றியில் வைக்கிறீர்களோ அது உங்கள் கணவனின் ஆயுளை அதிகரிக்கும்.

சரி பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, ஒரே ஒரு விரலி மஞ்சளை பூஜை செய்து கையில் வைத்துக் கொண்டாலே போதும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். 

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் கட்டாயம் ஏதாவது ஒரு அம்மனின் திருவுருவ படம் அல்லது மஹாலக்ஷ்மி படம் இருக்கும். அந்த திருவுருவ படத்திற்கு முன்பாக இரண்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்மனின் பாதத்தில் இந்த ஒரு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். 

எந்தவித எதிர்மறையான பிரச்சனையும் நீங்கள் வெளியே செல்லும் போது, உங்களுக்கு நேரக்கூடாது, என்றபடி மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, மூன்று முறை ‘ஓம் சக்தி பராசக்தி’ அல்லது 'ஓம் தூம் தூர்காலஷ்ம்யை நம' என்று 108 முறை உச்சரித்து தூப தீபம் காட்டி பூஜையை சிறிய அளவில் நிறைவு செய்து கொள்ள வேண்டும். 

அந்த விரலி மஞ்சளை எடுத்து முடிந்தால் உங்களுடைய முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் ஹேண்ட் பேக்கில் பர்ஸில் வைத்து கொள்ளுங்கள்.

மீண்டும் வீடு திரும்பிய பின்பு அந்த மஞ்சளை ஸ்வாமியின் படத்திற்கு முன்பாகவே வைத்துவிடுங்கள். மாத விலக்காகும் போது மட்டும் கண்டிப்பாக அந்த மஞ்சள் துணியை தொட வேண்டாம்.

மீண்டும் தினம்தோறும் அந்த மஞ்சளை கையோடு எடுத்துச் சென்றால், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
 



Leave a Comment