குழந்தை வரம் வேண்டும்?.... சஷ்டி விரதம் 


சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்... அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்த பெண்களின் கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள். 

குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு மிக சிறந்த விரதம் சஷ்டி விரதம். சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் பெறலாம்.

எல்லா மாதமும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி  6 நாட்கள் சஷ்டி விரதம் தொடர்ந்து இருக்க வேண்டும். இந்த சஷ்டி விரத நாட்களில் பகலில் உறங்குதல் கூடாது. இந்த சஷ்டி விரதத் தினத்தன்று இரவிலும் கண் விழித்து இருப்பது மிக மிக கூடுதல் பலன்களை தருகின்றது.

முருகனை ஆறு காலமும் பூஜை செய்து  வந்தால், கடன் தொல்லையில் இருந்து நீங்களாம்.

கடன் தொல்லையை நீங்குவதற்கு மற்றும் பணம் சேர இந்த 6 நாட்களில் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்டு வேண்டும்.

முருகனை மனதில் நிலை நிறுத்தி நேரம் தவிர விடாமல் கூடுதல் நேரம் கிடைத்தாலும் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை நினைத்து தியானம், பிரார்த்தனை, பாராயணம் செய்யலாம்..
 



Leave a Comment