செய் தொழில் வெற்றி பெற ஆண்களும்.... தீர்க்க  சுமங்கலியாக  வாழ பெண்களும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ....


ஒங்கார பூர்விகே தேவி  வீணா புஸ்தக தாரிணி  !  
வேதாம்பிகே நமஸ்துப்யம்  அவைதவ்யம் ப்ரயச்சமே !! 
பதிவ்ரதே மஹாபாகே   பர்துஸ்ய பிரியவாதினி  
அவைதவ்யம் ச  ஸௌபாக்யம் தேஹி த்வம்  மம 
ஸூவ்ருதே புத்ரான் பௌத்ரான் ஸக  ஸௌக்யம் ச சௌமாங்கல்யம்  சதேஹிமே   !!

ஓங்காரத்தை முன்னிட்டவளே, வீணை புஸ்தகம் இவைகளை தரித்தவளான வேத மாதாவே,  வைதவ்யம்  வராமல்  ஸூமங்கலியாக  செய். கன்யைகளும் ,ஸூமங்கலிகளும்  தினசரி  மும்மூன்று முறை ஜபித்தால் தீர்க்க ஸூமங்கலிகளாக இருப்பார்கள். 

ஸ்நாநம் ஆரம்பிக்கும் போது ::  

அதிக்ரூர  மஹாகாய கல்பாந்த  தஹநோபம !  பைரவாய  நமஸ்துப்யம்  அநுக்ஞாம்  தாது  மர்ஹஸி !!  

மிக க்ரூரமானவரும்  பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்நி போன்றவரும்  ஆன பைரவரே  உமக்கு நமஸ்காரம்.  இந்த ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய  உத்திரவு  கொடும் !  

கார்ய வெற்றி தரும் ஸ்லோகம்....

ஸ்துதா ஸித்வம் மஹாதேவி  விஸூத்தே  ந  அந்தராத்மனா !   
ஜயோ பவது மே நித்யம் ஸர்வ கார்யே  ப்ரஸாதத:   !!   

 ஓ மஹாதேவி ! நீ எல்லோராலும்  என்னாலும் சுத்த மனதுடன் துதிக்க பட்டாய். உனதருளால் ஸகல  காரியத்திலும்  ஜயம் உண்டாகட்டும்.! எந்த காரியத்தை  ஆரம்பித்தாலும் இதை  10 முறை ஜபித்தால்  ஜயம்  உண்டாகும்  !!
 



Leave a Comment