பொறையுடைமை - பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்து (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
இன்னாச்சொ னோற்பாரிற் பின் 
மு.வ விளக்க உரை: 
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார். 
கலைஞர் விளக்க உரை: 
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்



Leave a Comment