பச்சை மற்று இளஞ்சிவப்பு பட்டாடையில் அத்தி வரதர்....


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கின்றார். 34 ஆம் நாளில் இன்று பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 

சனிக்கிழமை இன்று விடுமுறை தினம் மற்றும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்  பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொது தரிசனத்தில் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். 33 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றதால் மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். 
 



Leave a Comment